13.1 C
France
May 28, 2023
செய்திகள்

பிரான்சில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா?

பிரான்சில் கொரோனா வைரசின் அறிகுறி மீண்டும் மிகுந்த அளவில் தென்படுவது கவலை அளிக்கிறது என பிரெஞ்சு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பிரான்சில் கோவிட் தொற்றுநோய் குறித்த தினசரி அறிக்கை மற்றும் பொது சுகாதார பிரான்ஸ் மற்றும் சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

தூய்மைக்கேடு

இந்த புதன்கிழமை, நவம்பர் 10 அன்று மட்டும் 24 மணி நேரத்தில் 11,883 புதிய கோவிட் – 19 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரான்சின் பொது சுகாதார துறை புள்ளி விவரங்களின்படி, கோவிட் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 7,244,040 வழக்குகள் பதிவுசெய்யப்படுத்தப்பட்டுள்ளன.

சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றின் விகிதம் 3.1% ஆக உயர்ந்திருக்கிறது. இது முந்தைய நாள் 3% ஆக இருந்தது.

மருத்துவமனையில்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 6,906 (24 மணி நேரத்தில் +55) ஆக உள்ளது, இதில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் 1,154 (24 மணி நேரத்தில் +8) பேரின் எண்ணிக்கையும் அடங்கும்.

மரணங்கள்

24 மணி நேரத்தில், 33 பேர் மருத்துவமனையில் கோவிட் காரணமாக இறந்துள்ளனர். கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 118,056 ஆக உள்ளது, இதில் மருத்துவமனையில் 91,159 பேர் இறந்துள்ளனர்.

தடுப்பூசி

பிரான்சில் தடுப்பூசி பரப்புரை தொடங்கியதிலிருந்து, 51,431,090 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

Related posts

பிரான்சு முழுவதும் திங்கட்கிழமை முதல் பள்ளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் !

Editorial

இந்தியா முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு : விரிவான தகவல்கள்

editor

பிரான்சு நகரமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழர்கள் !

Editorial

கீழடி அகழாய்வில் வெள்ளி நாணயம் கண்டுபிடிப்பு!

Editorial

பிரான்சில் கொல்லப்பட்ட ஆசிரியர் உடல் அடக்கம் : மக்ரோன் அஞ்சலி !

Editorial

பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழா

Editorial

Leave a Comment